Breaking News

6/recent/ticker-posts

பா.ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை

பா.ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை பிரதமர்மோடி இன்று வெளியிட்டார். அப்போது கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோர்உடன் இருந்தனர்.தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:-
ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும்.
2025-ம் ஆண்டு பழங்குடியினரின் பெருமை ஆண்டாக கடைப்பிடிக்கப்படும்.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல் படுத்தப்படும். இலவச ரேசன் பொருள் மேலும் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும்.பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம்.
திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும்.தமிழ்மொழியை உலகம் முழுவதும் பரப்பும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு.முத்ரா கடன் உதவி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்து கொள்ளலாம்.

 

 திருநங்கைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.ரூ.1க்கு சானிட்டரி நாப்கின். குறைந்த விலையில் பைப் மூலமாக கியாஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடி உடன் மருந்துகள் கிடைக்கும்.சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மலைவாழ் மக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.புல்லட் ரயில் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.நிலவில் மனிதன் தரையிறங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
வந்தே பாரத் ரயில் சேவைகள் அதிகரிக்கப்படும். 25 கோடிக்கு அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்பு.3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற இலக்கு.22 வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை
இந்தியாவை 3வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற நடவடிக்கை.
ஊழலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை. இந்தியாவை உணவுப் பதப்படுத்தும் மையமாக மாற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்று உள்ளன.
இதற்கிடையே பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை. வெற்று காகிதங்கள் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்து உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்