Breaking News

6/recent/ticker-posts

தாயிடம் வாழ்த்து பெற்ற திருமாவளவன்


பாராளுமன்ற தேர்தல் சூடுபிடித்து உள்ளது.தி.மு.க.,அ.தி.மு.க., பா.ஜனதா கட்சியினர் மற்றும் சுயேட்சை போட்டியாளர்கள் இன்று போட்டி போட்டு மனுத்தாக்கல் செய்தனர். நாளை முதல் தேர்தல் பிரசாரம் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. சிதம்பரம் தொகுதியில் மீண்டும் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று தனது தாயிடம் ஆசிபெற்றார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் இன்று அம்மாவிடம் வாழ்த்துப் பெற்றேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்